சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கோவிலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-06 18:45 GMT

திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் நான்குமுனை சந்திப்பு பகுதியில் மாவட்ட காவல்துறை மற்றும் திருக்கோவிலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜா தலைமை தாங்கி சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், விபத்துகளை தவிர்க்க அனைவரும் சாலை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து சாலை விபத்துகளால் ஆங்காங்கே ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வீடியோ காட்சிகள் ஒளிப்பரப்பப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்