கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

Update: 2023-07-20 20:15 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே குளத்துப்பாளையத்தில் சந்தானம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தரைமட்ட கிணறு உள்ளது. அந்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. தற்போது 15 அடிக்கு தண்ணீர் உள்ளது.

இந்தநிலையில் கிணற்றுக்குள் நேற்று முன்தினம் இரவில் நாய் ஒன்று தவறி விழுந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற சிலர், கிணற்றுக்குள் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எட்டி பார்த்தனர். அப்போது நாய் ஒன்று தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலை அதிகாரி தங்கராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி நாயை மீட்டனர். அவர்களை, பொதுமக்கள் பாராட்டினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்