கால்நடை மருத்துவமனை கட்ட கோரிக்கை

கால்நடை மருத்துவமனை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-30 18:04 GMT

அரியலூர் மாவட்டம், நைனாகுடிக்காடு கிராமத்தில் ஏராளமான மக்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவற்றை அருகில் உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நைனாகுடிக்காடு பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்