தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என த.மு.மு.க. கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-05-06 18:45 GMT

பனைக்குளம், 

த.மு.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் முகவை சலிமுல்லாகான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சுலைமான், நகர் தலைவர் முகமது அமீன், நகர் செயலாளர் முகமது தமீம், நகர் துணை செயலாளர் அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமநாதபுரம் நகரில் உள்ள தியேட்டர்களின் உரிமையாளர்களிடம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் தமிழகத்தில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி, புர்கா, பர்கானா ஆகிய திரைப்படங்கள் தமிழகத்தில் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இல்லாத ஒன்றை உருவாக்கியும் இந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. எனவே அவ்வாறான திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம், மதநல்லிணக்க ஒற்றுமைக்கு உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்