ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-09-12 16:55 GMT

ராமேசுவரம், 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி விசைப் படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்ற 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது 6 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டதுடன் படகின் உரிமையாளர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி அன்று படகின் அனைத்து ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம்

விடுதலை செய்யப்பட்ட இந்த 6 மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இடையே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்