ஒத்திகை நிகழ்ச்சி

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வதுநாளாக கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-11 18:45 GMT

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நேற்றுமுன்தினம் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் படகு மூலம் கடலில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக போலீசார் கடலில் படகு மூலம் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது

மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீஸ்துறைக்கு தகவல் தர வேண்டும் என எச்சரித்தனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்