குடியாத்தம் அருகே தூக்கிட்ட நிலையில் சிறுவன் உடல் மீட்பு

குடியாத்தம் அருகே தூக்கிட்ட நிலையில் சிறுவனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-05-22 04:07 GMT

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் ஸ்ரீசாந்த் (வயது 15). ஸ்ரீசாந்த் சிறு வயது இருக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் அவரது தாயார் வேறு ஒருவருடன் வசித்து வருகிறார்.ஸ்ரீசாந்த் அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா ராஜீவ் காந்தி வீட்டில் வசித்து வருகிறார்.

ஸ்ரீசாந்த் பள்ளிக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள ஒரு டிராக்டரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலையில் பாக்கம் கிராமத்தில் உள்ள கோவில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இன்று காலையில் அப்பகுதி மக்கள் கோவில் பக்கமாகச் செல்லும் போது சிறுவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கிராம மக்கள் பரதராமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்து போலீசார் விசாரணை நடத்தி சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சிறுவனின் உறவினர்கள் கூறுகையில்,

சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறினர்.15 வயது சிறுவன் தூக்கிடும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் அழைத்துச் சென்று அடித்து அனுப்பியதாகவும் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்