புனித லூக்கா ஆலயத்தில் பேரணி

மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி புனித லூக்கா ஆலயத்தில் பேரணி நடந்தது.

Update: 2023-07-03 23:30 GMT

வால்பாறை

மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது. அங்கு அமைதி நிலவ வேண்டி வால்பாறை புனித லூக்கா ஆலய வளாகத்தில் பேரணி நடந்தது. இதற்கு பங்கு தந்தை ஜிஜோதோமஸ் தலைமை தாங்கினார். இதில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மணிப்பூர் அரசு எடுக்க வேண்டும். சண்டை, கலவரம் வேண்டாம் அமைதி மட்டுமே வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பங்கு மக்கள் கைகளில் ஏந்தி ஆலயம் மற்றும் வளாகத்திற்குள் பேரணியாக சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்