பஸ்சிற்குள் மழை... குடைப்பிடித்த பயணிகள்...!

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பலத்த மழை பெய்தது. பஸ்சிற்குள் ஒழுகியதால் பயணிகள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர்.

Update: 2022-12-04 14:35 GMT

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சமத்தூர், நா. மூ. சுங்கம், கோட்டூர் வழியாக ஆழியாருக்கு தடம் எண் 37 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்சிற்குள் ஆங்காங்கே மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. டிரைவரும் மழையில் நனைந்தபடி பஸ்சை ஓட்டி சென்றார். இதற்கிடையில் பயணிகள் மழையில் நனைவதை தடுக்க குடைப்பிடித்தப்படி பயணம் செய்தனர். மேலும் பஸ்சிற்குள் மழைநீர் வழிந்தோடியது. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்