அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது- சென்னை ஐகோர்ட்டு

அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-16 13:12 GMT

சென்னை,

தன்னுடைய சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யகோரி கே.எம்.சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கு மீதான விசாரணையில் ,

அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருப்போரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை கண்டறிந்து, 4 வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டும் என்றும் கூறி , இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்