சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-01-04 18:58 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்