சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-27 18:59 GMT

வத்திராயிருப்பு, 

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சுந்தரமகாலிங்கம் கோவில்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் நேற்று வைகாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள விருதுநகர், மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள். அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு நடந்து சென்றனர்.

சிறப்பு அலங்காரம்

பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்