22-ந் தேதி மின்தடை

கண்ணங்குடி பகுதியில் 22-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-08-19 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வரும் 22-ந் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்