ஆவட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
ஆவட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராமநத்தம்,
மங்களூர் துணை மின் நிலையத்தில் இருந்து ஆவட்டி உயர் மின்னழுத்த பாதையில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோழபுரம், ம.பொடையூர், கல்லூர், ஆவட்டி, மேல் ஆதனூர், ஐவனூர், ஆலம்பாடி, அதர்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.