பூ மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராஜபாளையம் பூ மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-08-11 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பூ மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் 5 நாட்கள் திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுக்கும் விழா நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து உற்சவத்தின் போது அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்