எலவனாசூர்கோட்டையில்பா.ம.க.வினர் சாலை மறியல்

எலவனாசூர்கோட்டையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-07-28 18:45 GMT


உளுந்தூர்பேட்டை, 

நெய்வேலியில் என்.எல்.சி.யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா .ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, எலவனாசூர் கோட்டையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் செந்தில் மார்ட்டின், ஒன்றிய நிர்வாகிகள் ஜான் பீட்டர், கீழப்பாளையம் திருமுருகன், புகைப்பட்டி கொளஞ்சி, மேலப்பாளையம் ரஞ்சித், மற்றும் நந்திக்களம் பகுதியை சேர்ந்த பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்