இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

நிலவைத் தொடர்ந்து சூரியனையும் வெற்றிகரமாக ஆய்வு செய்யும் இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-02 08:51 GMT

சென்னை,

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது. விண்வெளி பயணத்தில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரோவுக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் 125 நாட்களில் எல் 1 புள்ளியை அடைந்து சூரியனை ஆய்வு செய்யத் தொடங்கும்.நிலவைத் தொடர்ந்து சூரியனையும் வெற்றிகரமாக ஆய்வு செய்யும் இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். சூரியன் குறித்த உண்மைகளையும் உலகிற்கு சொல்லும் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்!

Tags:    

மேலும் செய்திகள்