பிளஸ்-2 மாணவி மாயம்

பிளஸ்-2 மாணவி மாயம் ஆனார்.

Update: 2023-04-27 18:26 GMT

 தோகைமலை அருகே உள்ள புழுதேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் தமிழரசி (வயது 17). இவர் ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழரசி மளிகை கடைக்கு சென்று வருவதாக, தனது பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டு சென்று உள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் தமிழரசி வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு மற்றும் அக்கம், பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழரசியின் தாய் யசோதா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்