நாளை, நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை, நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-27 22:38 GMT

சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலைய பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ராமநாதபுரம், அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி, காந்தி மைதானம், மிலிட்டரி ரோடு, கிருஷ்ணன் புதூர் மற்றும் ராஜேஸ்வரி மண்டபம் வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

இதேபோல் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆத்துக்காடு, ஏ.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு, காமராஜர் நகர், திரு நகர், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, பள்ளக்காடு, கலெக்டர் பங்களா, ஏற்காடு மெயின் ரோடு, பாரதி நகர், அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் உடையாப்பட்டி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாநகர் பகுதியில் மின்சார பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே குமரகிரிபேட்டை, கிருஷ்ணாநகர், அம்மாபேட்டை போலீஸ் நிலையம், ஜோதி தியேட்டர், குண்டுபிள்ளையார் கோவில் தெரு, 40 அடி ரோடு, வட்டார போக்குவத்து அலுவலகம், நாமமலை அடிவாரம், குமரகிரி அடிவாரம், ராயல் பார்க் பள்ளி, பெரிய கிணறு ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்