இந்திய மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.-வை மன்னிக்க மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

Update: 2024-03-11 17:00 GMT

சென்னை,

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

"இந்திய மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.-வை மன்னிக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் கொடுக்கும் திட்டங்களை பாஜக தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காகவே சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. 

சிறுபான்மை மக்களை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதற்கான தொடர் அச்சுறுத்தல்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது. பிரித்தாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை பாஜக அமல்படுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்