நெல்லை: அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

நெல்லை அருகே வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-12 10:12 GMT

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் பிரசித்தி பெற்ற அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடிபிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், ஆதிசேஷ வாகனம், கருடாழ்வார் வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், பல்லாக்கு வாகனம்,தோழிக்கினியான் வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி ஆதிநாராயணசாமி கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. பரதநாட்டியம், நாதஸ்வரம், இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்