நீடாமங்கலம் - பழையநீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த வேண்டும்

நீடாமங்கலம் - பழையநீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2023-06-05 18:45 GMT

நீடாமங்கலம்- பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

வெண்ணாற்றின் குறுக்கே பாலம்

நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் வையகளத்தூர், ஒளிமதி, அன்பிற்குடையான், அரையூர், அரவத்தூர், குச்சுப்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் நீடாமங்கலத்தில் ெரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வழியாக கொரடாச்சேரி, திருவாரூர் செல்லும் பஸ்கள், கார்கள் பழையநீடாமங்கலம் வழியாக சென்று வருகிறது.

சாலையை அகலப்படுத்த வேண்டும்

திருவாரூர் பகுதியிலிருந்து தஞ்சை செல்லக்கூடிய வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகிறது. அப்போது நீடாமங்கலம் பழைய நீடாமங்கலம் சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி சிரமப்படுகி்ன்றனர்.

எனவே நீடாமங்கலம் பழையநீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்