தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கோவிலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2023-01-26 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரில் வருவாய் துறை சார்பில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இதற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கி வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் இணைப்பு குறித்து பேசினார். தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்த அவர் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் வருவாய்துறை அலுவலர், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்