முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-29 19:20 GMT

ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 20-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முத்துமாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் முன்பு பாண்டி பத்திரம் கிராமமக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்