வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்கள் சேதம்

வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்கள் சேதம் 7 பேர் மீது வழக்கு

Update: 2022-11-12 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கப்பூரை சேர்ந்தவர் காளி மகன் அருண்குமார் (வயது 21). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணையை வசூலிக்கும் முகவராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் 2 மோட்டார் சைக்கிள்களை வாங்கி ஓட்டி வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத அதே கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மகன்கள் கிருஷ்ணன், புண்ணியமூர்த்தி, இவருடைய மனைவி ஆஷா, பாண்டியன் மகன் ஆனந்தன், மார்கண்டேயன் மகன் கலையரசன், குருமூர்த்தி மகன் ஆனந்தபிரபு, கிருஷ்ணன் மகன் பவேஷ் ஆகிய 7 பேரும் சேர்ந்து அருண்குமாரை திட்டி தாக்கி அவரது 2 மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து அருண்குமார், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்