பருவ மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியாக உயர்வு

பருவமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியாக உயர்ந்தது

Update: 2022-07-07 16:44 GMT

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய பாசனம், குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 127.60 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 1,414 கனஅடியாகவும் இருந்தது. இதையடுத்து தற்போது கேரள மாநிலத்தில் பருவ மழை தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,642 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,655 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்