சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

"சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-09-20 17:50 GMT

சென்னை,

நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்ததை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறுகையில், "அதன்படி சென்னை ஐகோர்ட்டில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆா்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விக்டோரியா கவுரி உள்பட 5 நிரந்தர நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரைக்கு தமிழக கவர்னரும், முதல் அமைச்சரும் ஒப்புதல் அளித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்