ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோட்டில் குலாலர் தெருவில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் உலக நன்மைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் உச்சிமாகாளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமாள் பிச்சை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.