கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- ம.தி.மு.க.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-26 20:32 GMT

திருவிடைமருதூர்:-

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் தஞ்சை வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஆடுதுறை பேரூர் செயலாளர் சரவணன் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டு பேசினார். ஒன்றிய செயலாளர் பழனி, வக்கீல் சத்திய குமாரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-tan

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு உடனடியாக கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மணிமண்டபம்

மீத்தேன், ஷேல்கியாஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கும்பகோணத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்