ஆணழகன் போட்டி

ஆணழகன் போட்டி நடந்தது.

Update: 2023-04-16 19:22 GMT

மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி திருச்சி, மேலபுலிவார்டு ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 50 கிலோ முதல் 85 கிலோ வரையிலான உடல் எடை பிரிவில் 9 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க பொதுச்செயலாளர் அரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார். இதில் திருச்சி மாவட்ட தலைவர் வேதமூர்த்தி, பொருளாளர் சுகுமார், போட்டிக்குழு இயக்குனர் சிவராமன் சுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்