லாரி டிரைவர் திடீர் சாவு

திண்டிவனம் அருகே லாரி டிரைவர் திடீரென இறந்தார்.

Update: 2022-07-17 18:02 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலி (வயது 50), லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது மகள் வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷேக்அலியை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்