மது விற்றவர் கைது

மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-29 18:37 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் தலைமையிலான போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்த சந்தானம்(வயது 49) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்