அரசம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரசம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-07-09 21:56 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் உள்ள அரசம்மாள், அரசையா, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, மண்டப பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து விநாயகர், கருப்பசாமி, சப்தகன்னிமார் உள்பட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்