மாணவர்களுக்கு பாராட்டு

கலைதிருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Update: 2023-03-20 18:45 GMT


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

தொடர்ந்து, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பில் 3 சக்கர சைக்கிளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களுக்கான கலைதிருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கேடயத்தை கலெக்டா் சாருஸ்ரீ வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்