கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

Update: 2023-07-29 12:03 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.

இந்த கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்