டீக்கடை தொழிலாளி விபத்தில் பலி

வாழப்பாடி அருகே டீக்கடை தொழிலாளி விபத்தில் பலியானார். அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதில் உடல் சிதைந்த பரிதாபம்.

Update: 2022-06-05 18:00 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 49). இவர் டீக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவகுமார் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் முழுவதும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட உடல் டீ மாஸ்டர் சிவகுமார் என தெரியவந்தது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் கீழே விழுந்த நபர் மீது தொடர்ந்து சென்ற அனைத்து வாகனங்களும் ஏறி இறங்கியதை அடுத்து தலை, உடல் என அனைத்து பாகங்களும் நசுங்கி கிடப்பதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் நசுங்கிய உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் கீழே விழுந்த நபர் மீது தொடர்ந்து செல்லும் அனைத்து வாகனங்கள் ஏறி இறங்கி உடலை சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்