காமாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு
இரும்புத்தலை தெற்குதெருவில் காமாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே இரும்புத்தலை தெற்குதெருவில் உள்ள காமாட்சி அம்மன், பொம்மி வெள்ளைஅம்பாள், வீரனார் சுவாமி, விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்தன. இதன் முடிவில் குடமுழுக்கு விழாவுக்கான யாக சாலை பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. அப்போது கோவில் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.