கள்ளக்குறிச்சி: வன்முறை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் - ஒருவர் கைது

கள்ளக்குறிச்சியில் வன்முறை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-18 03:46 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக ரமேஷ் கண்ணன் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். வன்முறை தூண்டும் வகையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்ததாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்