கள்ளச்சாராயம் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Update: 2024-06-19 13:22 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக தொிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை அருந்தியதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

15-க்கும் மேற்பட்டோா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 9 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் விரைந்துள்ளனர். முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு செல்லும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி திரிதமாக கிடைக்க பணியாற்றும்படி முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்