மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு நடந்துள்ளது

Update: 2023-10-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பாலசுப்பிரமணியம் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் ராசையன் (வயது 50), மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பாக்கியம் (45), அரசு பள்ளி ஆசிரியர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் சமயபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது காலை 7 மணியளவில், திறந்திருந்த வீட்டின் முன்வாசல் வழியாக யாரோ மர்ம நபர்கள், ராசையன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அறையில் இருந்த ஒரு பேக்கை திருடிச்சென்றுள்ளனர். அதில், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ½ பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள், 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

இதுகுறித்து ராசையன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்