ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது

Update: 2023-07-27 20:08 GMT

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார். இப்போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார்.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்