வரதட்சணை வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு சிறை
வரதட்சணை வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே குரண்டியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 25). இவருக்கும் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் விக்னேஷ் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சங்கீதா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்து இசக்கி, விக்னேஷிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.