சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்

Update: 2022-07-12 14:38 GMT

 கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 20). இவர், 12 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்