கவர்னர் ஆர்.என்.ரவி கட்சி கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருகிறார் : பொன்முடி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவின் நிலை என்ன என்பதை ராஜ்பவன் எப்போது வெளியிடப் போகிறது ..

Update: 2023-02-22 14:04 GMT

தமிழக கவர்னர் ரவிக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் .

அக்கப்போர் செய்வதை விடுத்து; கவர்னர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் ? கவர்னர் வேலை என்னவோ அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவின் நிலை என்ன என்பதை ராஜ்பவன் எப்போது வெளியிடப் போகிறது ..

ஒரு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் போல செயல்பட்டு வருகிறார்

பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வருண பேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு காரல் மார்க்ஸ் கொள்கை கசப்பு மருந்து தான் என தமிழக கவர்னர் ஆர்.என் ரவிக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்