மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு....!

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-05-23 16:21 GMT


திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே சேப்பலாம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42), கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்தி (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் பகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் பாலமுருகன்( 21)எலக்ட்ரீசியன்.

இவர்கள் 3 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குளத்தூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டி வந்தார். களமாவூர் மேம்பாலம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே காரைக்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் குமார் மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார்த்தி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்