புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அதி வேகமாக வந்து மோதியதால் காரும் பஸ்சும் உருக்குலைந்து காணப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.