திருமணத்துக்கு தங்க நாணயம், உதவித்தொகை

முன்னாள் படை வீரர்கள் மகள்களின் திருமணத்துக்கு தங்க நாணயம், உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2023-03-01 17:37 GMT

வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தின் மூலம் போரில் உயிரிழந்த முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் மகள்களின் திருமணத்துக்கு தங்க நாணயம், உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி போரில் உயிரிழந்த முன்னாள் படைவீரர் 2 பேரின் மகள்களுக்கு தலா ரூ.1 லட்சமும், 8 கிராம் தங்க நாணயமும், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் 2 பேரின் மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயமும் என்று 4 பேருக்கு ரூ.3 லட்சம் திருமண உதவித்தொகை, 32 கிராம் தங்க நாணயமும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குனர் லெப்டினன் கர்னல் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்