காதலன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட காதலி

ரிஷிவந்தியம் அருகே காதலன் இறந்த சோகத்தில் காதலன் வீட்டிற்கு சென்று காதலி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

Update: 2022-05-20 16:34 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் அருகே பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா (வயது 24). பட்டதாரி பெண். நூரோலை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஆகாஷ். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போதே காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சுதா வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சுதாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட அவர் தனது காதலன் வீட்டில் தங்கப் போவதாக கூறிவிட்டு காதலன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 - ம் தேதி காதலன் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காதலன் இறந்த துக்கத்தில் காதலியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்