கிணற்றில் ெகாட்டப்படும் குப்பை

கிணற்றில் கொட்டப்படும் குப்பையால் தொற்றுநோய் பரவுகிறது.

Update: 2023-05-11 19:44 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே இருளப்ப நகர் உள்ளது. இங்குள்ள விநாயகர் கோவில் அருகே பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே மேல்மட்ட நீர்தேக்க தொட்டி, குடியிருப்புகள், தபால் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த கிணற்றில் கழிவு பொருட்கள், குப்பை, பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பொதுமக்கள் போடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. மேலும் ெதாற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே இருளப்பநகர் விநாயகர் கோவில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும், அதில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளப்ப நகர், ஏ.டி.ஆர். நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்