விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-09-06 21:16 GMT

தொட்டியம்:

தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த அப்பணநல்லூர், அம்மன்குடி, கருப்பணாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த 9 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அந்த சிலைகள் கொளக்குடி மாரியம்மன் திடலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் இரவில் மணமேடு அருகில் உள்ள காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்